நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் உரை மீது இன்று விவாதம்..!
தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
2021 – 2022 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் கடந்த 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப் பட்ட நிலையில் சட்டப்பேரவை வரலாற்றில் மேலாண்மை மற்றும் வேளாண் துறைக்கு முதன் முறையாக தனி மற்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து துறை சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.






