தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் ஆகியவற்றால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.






