8 இடங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்..!
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரொனா தொற்று அதிகரித்துவிட்டதால் 8 இடங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 8 இடங்களில் இன்று இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அஜ்மீர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்ளிட்ட இடங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநகராட்சிகளிலும் இரவு 10 மணி வரை மட்டுமே சந்தைகளை திறக்க ராஜஸ்தான் அரசு அனுமதியளித்துள்ளது.






