வாக்குச் சாவடிகளுக்கு செல்லாமலே வாக்களிக்கும் ரிமோட் வாக்களிப்பு முறை..!
வாக்குச் சாவடிகளுக்கு செல்லாமலே வாக்களிக்கும் ரிமோட் வாக்களிப்பு முறை அடுத்த மக்களவைத் தேர்தலில் அமலுக்கு வரக்கூடும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். வாக்களிப்பதில் புதிய முறையை அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவினருடன் இதர பிரிவினருடன் இணைந்து இதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முடிவாக முதல் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் அறிவிக்க உள்ளதாக சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.






