சைக்கிள் ரிக்ஷாவை ஒட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார்.!
சென்னை ராயப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் அங்குள்ள காமாட்சியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தியதோடு சைக்கிள் ரிக்ஷாவை ஒட்டி வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர் தூவி அமைச்சர் ஜெயக்குமாருக்கு வரவேற்பு அளித்துள்ளனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடித்ததாக கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.






