சசிகலா விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் பதிவு..!
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெய பிரதீப் முகநூலில் பதிவிட்டுள்ளார். சசிகலா பூரண நலம் பெற்று அறம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல என்றும் தன் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு எனவும் ஜெயபிரதீப் விளக்கம் அளித்துள்ளார்.






