--- --:--:-- --

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரொனா வர வாய்ப்பு..!

5

கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட பிறகும் கூட கொரொனா வர வாய்ப்பிருப்பதாக சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அனைத்து வகை தடுப்பூசிகளுக்கும் உள்ள பொதுவான இலக்கணம் என்று அங்கு பணிபுரியும் விஞ்ஞானி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பு மருந்துகள் 28 நாட்கள் இடைவெளியில் அவசரகால சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளன.

 

இந்த நிலையில் கோவிஷீல்டின் செயல் தன்மை குறித்து விளக்கிய விஞ்ஞானிகள் இரண்டும் வெவ்வேறு தொழில் நுட்பத்தால் உருவானவை என்றும், இரண்டு மருந்துகளையும் கலந்து பயன்படுத்த கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

 

28 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக போடப்பட்டால் அதன் பலன் சிறப்பாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon