போலி மருத்துவர் திருத்தணிக்காசலம் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து இருப்பதாக வதந்தி பரப்பிய சித்த மருத்துவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். புதிய புகார்தாரர் யார்? உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரொனாவுக்கு மருந்து கண்டு பிடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரப்பி வந்தார் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்.

 

இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை கொடுத்த புகாரின் பேரில் வதந்தி பரப்பிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கடந்த ஆறாம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நான்கு நாட்கள் நடத்தப்பட்ட விசாரணையில் வாத சுர குடிநீரும், தான் கண்டுபிடித்த ஆயுஷ் எக்ஸ் என்ற மாத்தி ரையும் தான் கொரோனாவுக்கு தான் பரிந்துரைத்ததாகக் கூறியுள்ளார்.

 

இதையடுத்து அவர் கூறிய மருந்துகள் பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. வெண்புள்ளிகாக சிகிச்சை எடுத்த, தேனியை சேர்ந்த குருநாதன் தான் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்துள்ளார். அதேபோல் பக்கவாதத்திற்கான சிகிச்சை எடுத்த மதுராந்தகத்தில் சிறந்த சுரேஷும் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

 

இவர்களின் புகார் அடிப்படையில் போலீசார் இரண்டு தனித்தனி வழக்குகளை பதிவு செய்துள்ளனர். திருத்தணிகாசலத்தின் மீதான ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் மீது ஆன்லைன் புகார்கள் குவியத் தொடங்கின. அவர் போலி மருந்துகளை அளித்தாகவும் அதனால் பாதிக்கப்பட்டதாகவும் புகார்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.

 

திருத்தணிகாசலம் மீது மோசடிப் புகார்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து திருத்தணிகாசலத்தின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதற்கான நகல் பூந்தமல்லி சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

 

தேனியில் செயல்பட்டு வந்த திருத்தணி காசலத்தின் அலுவலகம் ஒன்றில் இருந்து அவர் தயாரித்து வைத்திருந்த மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


Leave a Reply