சேலம் கல்லூரி மாணவர்களுக்கான பிரியாணி சமைக்கும் போட்டி
சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினத்தில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பிரியாணி சமைக்கும் போட்டியில் மாணவர்கள் விதவிதமான பிரியாணி செய்து அசத்தினர். இந்த போட்டியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு சுவைமிகு பிரியாணியை சமைத்தனர்.
இதில் முதலிடத்தை பிடித்த 2 மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் இரண்டாம் இடம் பிடித்த 2 மாணவர்களுக்கு 2000 ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த மாணவருக்கு ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




