எந்தவிதமான நோய் அறிகுறிகளும் இல்லாமல் சீனாவின் 10 வயது சிறுவனுக்கு கொரானா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது. சீன புத்தாண்டையொட்டி உகானுக்கு வந்த இந்த சிறுவனின் குடும்பத்தில் பெற்றோர் உடல் நலிவடைந்து சிகிச்சை பெற்று ஊர் திரும்பினார்.
ஆனால் எந்த நோய் அறிகுறியும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்த இந்த சிறுவனுக்கும் பரிசோதனை செய்யுமாறு அவர்கள் வற்புறுத்தியதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் சிறுவனுக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து எந்த அறிகுறியும் இல்லாமல் கொரானா வைரஸ் பரவ கூடும் என்ற அச்சம் ஏற்பட்டு, இது எந்த அளவுக்கு நோய் தாக்கத்தை அதிகரிக்கும் என்ற பீதி சீனாவில் நிலவுகிறது.