நள்ளிரவில் உலா வரும் கரடி!
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மலைக்கிராமத்தில் நள்ளிரவில் கரடி ஒன்று உலாவரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு ரோட்டில் நடந்தபடியே செல்லும் அந்த கரடியை அப்பகுதியில் காரில் வந்த நபர் வீடியோ எடுத்துள்ளார்.
காரை கண்டதும் அந்த கரடி அங்குமிங்கும் ஓடி வருவதும் பின்னர் அங்கிருக்கும் அலுவலகத்தில் கிரில் கதவின் மீது ஏறி குதித்து உள்ளே செல்லும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




