சூலூர் அருகே காலாவதியான ஆங்கில மருந்துகளை எரிக்க முயற்சி

கோவை மாவட்டம் சூலூர் அருகே காலாவதியான ஆங்கில மருந்துகளை குடியிருப்பு பகுதிக்கு அருகே எரிக்க முயன்றதாக ஒருவரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காடம்பாடி பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே ஆட்டோ ஒன்றில் வந்த நபர் காலாவதியான ஆங்கில மருந்துகளை முயன்றஎரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

 

அவரை பிடித்து பொதுமக்கள் விசாரித்தபோது பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள ராஜா சிந்தி ஆகியோருக்கு சொந்தமான மருந்தகத்தில் இருந்து அவற்றைக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply