இனியாவது முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள்

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று இனியாவது முறையான இட ஒதுக்கீட்டை செய்து உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று அளித்துள்ள தீர்ப்பு திமுக மீது விழுந்த சம்மட்டி அடி என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதை மறுத்துள்ளார்.

 

தேர்தலை நிறுத்துவதற்காக திமுக வழக்கு தொடரவில்லை என உச்சநீதிமன்றமே கூறியுள்ளதாக முகஸ்டாலின் சுட்டிகாட்டியுள்ளார்.

 

மேலும் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தவறான தகவலை கூறியதாக குற்றம்சாட்டிய முகஸ்டாலின் உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பின்படி இனியாவது இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணைய முயற்சிக்க வேண்டும் என்றார்.


Leave a Reply