கேரளாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்த மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மலப்புறத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி தான் பேசுவதை மாணவர்கள் யாரேனும் மொழிபெயர்க்க விரும்புகிறீர்களா என கூட்டத்தை நோக்கி கேட்டார். இதற்கு 11 ஆம் வகுப்பு பயிலும் ஃபாத்திமா என்ற மாணவி கையை உயர்த்தி தான் தயார் என கூறினார்.
அவரை மேடைக்கு அழைத்த ராகுல் காந்தி தனது உரையைத் தொடங்கினார். அவர் பேசியதை அந்த மாணவி மலையாளத்தில் மிகச்சிறப்பாக மொழிபெயர்த்தார். மாணவிக்கு சாக்லேட் அள்ளித்து ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்த நிலையில், பலரும் மொழிபெயர்ப்பு பணியை சிறப்பாக செய்த மாணவியை பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
கும்பமேளாவை நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்
தனியார் பேருந்து ஓட்டுனர்களிடையே மோதல்..!
அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளியில் மறுசுழற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
டெல்லியில் ஆட்சியை பிடித்ததும் பிரம்மாண்ட ஆர்எஸ்எஸ் அலுவலகம் திறப்பு..!
தாலியுடன் பள்ளிக்கு வந்த 9ம் வகுப்பு மாணவி..!
கல்யாண வீட்டு சாப்பாடு..மயங்கி விழுந்த 40 பேர்..!