திருநங்கைகளுக்கான உலக அழகிப்போட்டி: இந்தியா சார்பில் சென்னையை சேர்ந்த நமீதா மாரிமுத்து பங்கேற்பு
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையை சேர்ந்த நமிதா மாரிமுத்து திருநங்கைகளுக்கான சர்வதேச அழகிப் போட்டியில் பங்கேற்க உள்ளார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் டிசம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 30 திருநங்கைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நமீதா இந்தியாவிலிருந்து முதன்முறையாக தாம் இந்த போட்டியில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




