கோவை நரசீபுரத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் 13 அடி நீளமுள்ள ராஜநாகம்

கோவை நரசிபுரம் அப்பகுதியில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் 13 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் பிடித்து வனத்திற்குள் விட்டனர். கோவை புறநகர் பகுதியான நரசிபுரத்தில் விவசாயி ரவி குமார் என்பவரின் தோட்டத்தில் 13 அடி நீளமுள்ள ராஜநாகம் இருப்பது தெரியவந்தது.

 

இதுகுறித்து ரவிக்குமார் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் ராஜநாகத்தை பிடித்து சிறுவாணி ஒட்டிய வனப்பகுதியில் விட்டனர்.


Leave a Reply