தமிழகத்தில், 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, வேலூரை பிரித்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருநெல்வேலியை பிரித்து நெல்லை, தென்காசி என , மொத்த 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதிய மாவட்டங்கள் பிரிப்புக்கு பிறகு வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், அணைக்கட்டு, காட்பாடி, என ஐந்து தாலுக்கா, வேலூர், குடியாத்தம் 2 வருவாய் கோட்டங்கள் இருக்கும்.
திருபத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டாறம்பள்ளி, ஆம்பூர், என நான்கு தாலுக்கா; திருப்பத்தூர், வாணியம்பாடி 2 வருவாய் கோட்டங்கள் இடம் பெறும். ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாலாஜா, நெமிலி, ஆற்காடு, அரக்கோணம் என நான்கு தாலுக்கா; ராணிப்பேட்டை, அரக்கோணம் 2 வருவாய் கோட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
அதேபோல், நெல்லை மாவட்டத்தில் நெல்லை,சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், மானூர், திசையன்விளை, என எட்டு தாலுக்கா; நெல்லை, சேரன்மகாதேவி ஆகிய 2 வருவாய் கோட்டங்களும் இருக்கும்.
தென்காசி மாவட்டத்தில், தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், திருவேங்கடம், கடையநல்லூர், செங்கோட்டை, வி.கே.புதூர், தென்காசி, என எட்டு தாலுக்கா இடம் பெற்றிருக்கும்.
காஞ்சிபுரத்தை பிரித்து உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், திருக்கழுக்குன்றம் பல்லாவரம், வண்டலூர் என 8 தாலுகா; செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் குன்றத்தூர், ஆகிய தாலுகாக்களாக செயல்படும்.