இந்தியப் பசுக்களின் பாலில் தங்கம் கலந்திருக்கிறது: பாஜக தலைவர்

இந்திய பசுக்களின் பாலில் தங்கம் இருக்கிறது என்று மேற்குவங்க பாரதிய ஜனதா தலைவர் திலீப் கோஷ் பேசியிருக்கிறார்.பர்த்வாணியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் இந்திய பசுக்களின் பால் சிறிது மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் அதில் தங்கம் கலந்திருப்பதே என்று கூறியிருக்கிறார்.

 

இந்திய பசுக்களின் ரத்தநாளமானது சூரிய ஒளியின் உதவியோடு தங்கத்தை உற்பத்தி செய்வதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதுமட்டுமின்றி மாட்டின் கறியை உண்பவர்கள் நாய் கறியை உண்ண வேண்டும் எனவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.


Leave a Reply