கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் முதல்வர் எடியூரப்பாவின் புதிய ஆடியோ குறித்து விசாரிக்க சிறப்பு அமர்வை உருவாக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
கர்நாடக காங்கிரஸின் கோரிக்கையை ஏற்பது குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் ஆலோசனை பெறப்படும் என வழக்கை விசாரிக்கும் அமர்வின் தலைவர் நீதிபதி ரமணா தெரிவித்திருக்கிறார். கர்நாடகாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டு இருந்த நேரத்தில் மதச்சார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்கள் அமித்ஷாவின் அறிவுறுத்தலின்படி மும்பையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று எடியூரப்பா பேசுவதைப் போன்ற ஆடியோ பதிவு அண்மையில் வெளியாகியிருந்தது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்களின் தியாகத்தால் தான் பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கிறது என்ற உண்மையை தங்கள் கட்சியில் சிலர் உணர மறுக்கின்றனர் என்ற பேச்சும் அதில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பை வழங்கும் முன் இந்த ஆடியோ குறித்து விசாரிக்க சிறப்பு அமர்வை நியமிக்க காங்கிரஸ் கோரியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் வரும் 25ஆம் தேதி தீர்ப்பை வழங்குவதாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறது.