வேர்க்கடலையை மிதித்ததற்காக குழந்தை அடித்துக் கொலை

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே காயவைத்த வேர்கடலையை மிதித்த குழந்தையை அடித்துக் கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெய்வேலி அடுத்த மேல குப்பத்தை சேர்ந்த உத்தண்டி, ராஜேஸ்வரி தம்பதிக்கு 3 மகள்களுடன் கமலம் என்பவர் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கமலத்தின் வீட்டு மாடியில் வேர்கடலை காய வைத்துள்ளார்.

 

அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வேர்கடலையை மிதித்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கமலாவின் குடும்ப நண்பர் ஐயப்பன் என்பவர் மீனா என்ற 5 வயது குழந்தையை தலைமுடியைப் பிடித்து மாடிச்சுவற்றில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை மீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைப்பார்த்த கமலமும், உறவினர்கள் ஐயப்பன், அருள்முருகன், அஞ்சலை ஆகியோர் கொலையை மறைக்க முடிவு செய்து குழந்தை தவறி விழுந்து விட்டதாக நாடகமாடியுள்ளனர். மேலும் கமலத்தின் முந்திரி தோப்பு முதனை கிராமத்தில் இருப்பதால் அங்கு சென்று குழந்தையின் உடலை புதைத்துள்ளனர்.

 

மீனாவின் குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியே விடாததால் ராஜேஸ்வரியும் கணவர் உத்தண்டியும் அங்கிருந்து தப்பி வந்து நெய்வேலி தெர்மல் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர்.

 

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்ட கமலம் ஐயப்பன், அஞ்சலை ஆகியோர் குழந்தையை புதைத்த இடத்தை காட்டினார். இதையடுத்து உடல் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள அருள்முருகன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Leave a Reply