செல்ஃபி மோகத்தில் உயிரை விட்ட புதுமணப் பெண்

கிருஷ்ணகிரி மாவட்டம் காரமடையில் செல்பி எடுக்கும்போது திருமணமாகி 15 நாட்களே ஆன புதுமணப்பெண் உட்பட 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் . ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளங்கோவின் மகள்கள் கவிதா ஆகியோர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். மகன் சந்தோஷ் ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான்.

 

இவர்கள் நான்கு பேரும் உறவினரான புதுமண தம்பதி பிரபு நிவேதா மற்றும் யுவராணி ஆகியோருடன் ஊத்தங்கரையில் சினிமா பார்த்துவிட்டு அணையை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். ஆனால் அதிக அளவு தண்ணீர் செல்வதை கண்ட அவர்கள் தண்ணீரில் இறங்கி நின்றபடி செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். கவிதா ஸ்மிதா சந்தோஷ் புது தம்பதி நிவேதா ஆகியோர் தண்ணீரில் நின்று கொண்டிருக்க பிரபு தண்ணீரை ஒட்டியவாறு கரையில் நின்றபடி தனது செல்போன் மூலம் செல்ஃபி எடுத்தார்.

 

அப்போது எதிர்பாராதவிதமாக கவிதா உள்ளிட்ட 5 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினர் இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபு கூச்சலிட்டபடி அவரை மட்டும் மீட்டு கரை சேர்த்தார், அதற்குள் மற்ற 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதைக் கண்டு பிரபுவும் இவர் ஆலயம் கதறி அழுதனர்.

 

தகவலறிந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் கவிதா ஸ்நேகா சந்தோஷமே 4 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். புதுமணப்பெண் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டப்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply