புதுக்கோட்டையில் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் சென்றவர் சீட் பெல்ட் அணிய வில்லை என அபராதம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜபிரபு. இவர் கடந்த வாரம் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அறந்தாங்கி காரைக்குடி சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ராஜபிரபுவை வழிமறித்தனர்.
அப்போது ராஜகுரு தலைக்கவசம் அணியாததால் அவரிடம் 100 ரூபாய் அபராதம் வசூல் செய்த காவல்துறையினர் அதற்கான ரசீதையும் வழங்கியுள்ளனர். அதில் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டதாக குறிப்பிட்டதை கண்டு ராஜபிரபு அதிர்ச்சியுற்றார். பின்னர் இதுகுறித்து காவல் நிலைய போலீசாரிடம் கேட்டபோது பணிச்சுமை காரணமாக அதற்கான காரணத்தை மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.