சுபஸ்ரீ உயிரிழந்தது அவரது விதி ! பிரேமலதா பேச்சால் சர்ச்சை

சென்னையில் பேனர் விழுந்து மின்பொறியாளர் சுபஸ்ரீ உயிரிழந்தது அவரது விதி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் பேனர் விழுந்த விவகாரத்தை ஒரு விஷயமாக எடுத்துக் கொண்டு திமுக தலைவர் மு க ஸ்டாலின் அரசியல் செய்ய பார்ப்பதாக தெரிவித்தார்.

 

மேலும் தமிழகத்தில் பலர் இல்லாத நிகழ்ச்சி உண்டா என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் சர்வசாதாரணமாக நடக்கும் கொலை குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளை வெளியிடும் முன்பு நீதியரசர்கள் நன்கு சிந்தித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


Leave a Reply