அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் ஆட்சி மீண்டும் அமைய ஆதரவளிக்குமாறு பேசிய பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இந்திய வெளியுறவுக் கொள்கையை பிரதமர் மோடி மீறிவிட்டதாக கூறியுள்ளார்.
அடுத்த நாட்டில் தேர்தலில் இந்தியா எப்போதும் கருத்து தெரிவித்தது இல்லை என்ற ஆனந்த் சர்மா அதிபர் தேர்தலில் பிரதமர் மோடி ஆதரவு கேட்டதன் மூலம் இந்தியாவிற்கு நீண்ட நாள் தொடரக்கூடிய கெடுதலை செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். ஹூஸ்டனில் 50,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே பேசிய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற ஆதரவளிக்குமாறு பேசினார்.
மேலும் செய்திகள் :
தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு..!
கரையை கடந்த மிக்ஜாம் புயல்.. ஆந்திராவின் நிலைமை என்ன..?
முதல்வர் ஸ்டாலின், புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் புயல் குறித்து பேசினேன் : அமித்ஷா
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த 13 பேர்..!
4 மாநில தேர்தல் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி..!
3 மாநிலத்தில் தோல்வி.. தற்காலிக பின்னடைவு தான் - மல்லிகார்ஜுன கார்கே