இந்தியாவில் வாழ நினைக்கலாமே தவிர ஆள நினைக்க கூடாது!
ராகுல்காந்தி வெளிநாட்டவர் என்றும் அவர் இந்தியாவில் வாழ நினைக்கலாமே தவிர ஆள நினைக்க கூடாது என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.தற்போது காங்கிரஸில் இருப்பவர்கள் இந்தியாவில் இந்தியர்களே இல்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு என்பது நடிகர் ரஜினிகாந்தின் கருத்து மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலும் அதுதான் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். எப்போதும் இருமொழிக் கொள்கையை அதிமுக பின்பற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




