நாமக்கல் அருகே அரசு விடுதியில் கட்டிட வசதி இல்லாததால் மாணவர்கள் சமையலறையில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சியில் அரசு உறைவிடம் மாணவர் விடுதி அமைந்துள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மலைவாழ் இன மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு ஏழு அறைகள் மட்டுமே இருப்பதால் மாணவர்கள் போதிய இட வசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சமையலறை கட்டடத்தில் மாணவர்கள் படுத்து உறங்கும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி தண்ணீர் வசதியும் தரமான உணவு இல்லாமலும் அரசு உறைவிடம் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
சிபிஐ விசாரணை கோரி போராட்டம் நடத்திய விசிக நிர்வாகிகள் 12 பேர் கைது..!
ஆளுநரின் குடியரசு தின விழா : தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்காது
பொங்கல் தொகுப்பு பெற இன்றே கடைசி..!
மஹிந்த ராஜபக்சவின் மகன் கைது..!
மளிகை கடைக்காரரை மாடு முட்டிய அதிர்ச்சி காட்சி..!
பள்ளி மாணவன் உயிரிழப்பு..போராட்டத்தில் குதித்த மக்கள்..!