திரைப்பட பாணியில் தப்பிய கைதியை கண்டுபிடித்த போலீஸ் ! நீ பாத்த படத்த போலீசும் பாத்து இருப்பங்கல!

திருச்சி மத்திய சிறையில் இருந்து கத்தி பட பாணியில் தப்பிய நைஜீரியரை 57 நாட்களுக்குப் பிறகு டெல்லி சென்று தமிழக போலீசார் கைது செய்திருக்கிறார்கள். திருச்சி மத்திய சிறையில் அமைக்கப்பட்ட நைஜீரிய குற்றவாளி ஒருவர் தப்பினார். சிறை மற்றும் சிறைக்கு வெளியே உள்ள எந்த கண்காணிப்பு கேமராவிலும் சிக்காத அவரை தமிழக போலீசார் கைது செய்தனர்.

 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் இலங்கை தமிழர்கள், வங்கதேசத்தினர், நைஜீரியர்கள் என 40க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நைஜீரியாவை சேர்ந்த 32 வயதான ஸ்டீபன் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த ஜூலை 19ஆம் தேதி சிறப்பு முகாமில் இருந்து தப்பிச் சென்றார். ஜூலை 19ஆம் தேதி இரவு சோதனை செய்த போலீசார் சிறப்பு முகாமில் இல்லாதது தெரியவந்தது.

 

இதையடுத்து சிறப்பு முகாம் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் எதிலும் ஸ்டீபனின் உருவம் பதிவாகவில்லை. இதையடுத்து சிறைக்கு வெளியே உள்ள போக்குவரத்து போலீசாரின் சிசிடிவி களில் பதிவாகியுள்ளதா என பரிசோதித்தனர். அதிலும் ஸ்டீபன் உருவம் பதிவாகவில்லை. இதையடுத்து ஜூலை 19ஆம் தேதி மத்திய சிறை உள்ளே உள்ள சிறப்பு முகாமில் வந்த வாகனங்கள் குறித்து சோதனை செய்தனர். அதில் ஒரு தண்ணீர் லாரி வந்து சென்றது தெரிய வந்தது.

 

விசாரணையில் தண்ணீர் லாரியில் தொங்கியபடி ஸ்டீபன் தப்பித்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. கண்காணிப்பும் பாதுகாப்பும் மிகுந்த மத்திய சிறை வளாகத்தில் இருந்து ஒரு கைதி தப்பி சென்றது எப்படி என விசாரணை நடத்தப்பட்டது.இதையடுத்து மாநகர காவல் ஆணையர் அமல்ராஜின் உத்தரவின்பேரில் தனிப்படையினர் ராஜஸ்தான், மும்பை என 57 நாட்களாக ஸ்டீபன் தேடிவந்தனர்.

 

இந்நிலையில் மீண்டும் போலி பாஸ்போர்ட் எடுத்து நைஜீரியாவில் தப்பிச் செல்லும் நோக்கத்துடன் மும்பையில் தங்கி இருப்பதாக திருச்சி தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீரன் பட பாணியில் தமிழக போலீசார் மும்பை சென்றனர்.ஆனால் தனிப்படை போலீசார் தனது இருப்பிடத்தைக் கண்டு பிடித்ததை தெரிந்து கொண்ட ஸ்டீபன் அங்கிருந்து தப்பி டெல்லிக்குச் சென்ற தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர்.

 

அங்கு ரகசிய இடத்தில் பதுங்கி இருந்த ஸ்டீபனை திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்தனர். 58 நாட்களுக்குமுன் சிறையிலிருந்து தப்பித்த குற்றவாளியின் புகைப்படத்தை மட்டுமே வைத்துக் கொண்டு நாடு முழுவதும் அலைந்து திரிந்து கைதியை கைது செய்த திருச்சி தனிப்படை போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Leave a Reply