மேற்குவங்க மாநிலம் ஹவுரா வில் வேலை வாய்ப்பு கேட்டு இடதுசாரி அமைப்பினர் நடத்திய அமைதிப் பேரணியில் காவல்துறையினர் கலைக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது .அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.
இந்திய மாணவர் அமைப்பினர் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் அமைப்பினர் இணைந்து சிங்கூரில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி வேலை வாய்ப்பு கேட்டு அமைதி பேரணியாக சென்றனர். ஹவுராவிற்கு அருகே அவர்களை தடுத்து நிறுத்திய காவலர்கள் திடீரென தடியடி மேற்கொண்டு அவர்களை கலைக்க முயன்றனர். இதனால் பதில் இதற்கு பதிலாக போராட்டக்காரர்களும் சென்ற இடம் என்பதால் அங்கு பதற்றம் நிலவியது.
இதை எடுத்து தண்ணீரை பீச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் காவலர்கள் அவர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. வேலைவாய்ப்பு கோரி அமைதியான முறையில் பேரணியாகச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் அராஜகமாக நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என்று இடதுசாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.