கடலூரில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். பின்னர் அன்புச்செல்வன் உத்தரவின்பேரில் கடலூர் அரசு மருத்துவமனையில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் கீதா ஆய்வு மேற்கொண்டார்.


Leave a Reply