வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருவிழாவின் ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கி செப்டம்பர் எட்டாம் தேதி வரை கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பெருவிழாவை தொடங்குவதற்கான கொடியேற்றம் வழக்கமான உற்சாகத்தோட நடைபெற்றது. மாலை ஆறு முப்பது மணி அளவில் பேராலய முகப்பில் இருந்து திருக்கோவில் ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்து கொடி மேடையை அடைந்தது, அங்கு வந்து கொடிய இனி மெல்ல மெல்ல அசைத்து உச்சியை நோக்கி செல்லும்போது பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மரியே வாழ்க என விண்ணைப் பிளக்கும் அளவிற்கு முழக்கமிட்டனர்.
கொடியை ஏற்றிய உடனே பேராலயத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் ஒரே நேரத்தில் ஒளிர்ந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்தனர். அவர்களின் பாதுகாப்பிற்காக நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பேராலய விழாவின் முக்கிய நிகழ்வாக அன்னையின் திருத்தேர் பவனி வரும் செப்டம்பர் ஏழாம் தேதி இரவு நடைபற உள்ளது. மேலும் அன்னையின் பிறந்த நாளான செப்டம்பர் எட்டாம் தேதி சிறந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.
இதேபோல் சென்னை பெசன்ட் நகரிலுள்ள வேளாங்கண்ணி ஆலயத்தின் 47ம் ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது ஊர்வலமாக வந்த கொடியினை மயிலை பேராயர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள 75 கொடிக்கம்பத்தில் ஏற்றிவைத்தார். வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி கூட்டுத் திருப்பலியும் அதைத் தொடர்ந்து அன்னையின் ஆடம்பர தேர்பவனி நடைபெறும் பின்னர் விழாவின் இறுதி நாளில் கொடி இறக்கும் நிகழ்வும் நடைபெறும்.