தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை : எடப்பாடி பழனிசாமி

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார். அரசு முறை பயணமாக இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் சுகாதாரத்துறை ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானது.

 

தமிழகத்தில் நகர் உட்கட்டமைப்பு, வீட்டு வசதி, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்து பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நாடுகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். அப்போது மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னனி மாநிலமாக திகழ்வதாகவும் அவர்களிடம் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

 

இந்தியாவில் சிறந்த மருத்துவர்கள் செவிலியர்கள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும், முதலமைச்சர் கூறினார். மேலும் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் செயல்படுவதாக தெரிவித்த முதலமைச்சர்., இங்கிலாந்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கோரி திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

 

முன்னதாக கிங்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் தொடங்கப்பட இருப்பதற்கு அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்தார். லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் கிங்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையில் நேற்று உரையாற்றினார்.

 

அப்போது விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் விலை மதிக்கமுடியாத உயிர்களை விபத்தில் இருந்து மீட்டு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிர்களை காப்பாற்றுவது பாராட்டுக்குரிய சாதனை என்றும் தெரிவித்தார்.இதே போன்று தமிழகத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார்.


Leave a Reply