போராட்டம் நடத்திவரும் அரசு மருத்துவர்கள் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் அவர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அரசாணைப்படி கூடுதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் அரசு மருத்துவர்கள் உடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை 6 மணி நேரம் நீடித்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்கள் உடன் ஆலோசித்து விட்டு அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்று மருத்துவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் மருத்துவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது .மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக். கொண்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துவர்களின் நான்.கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவது அமைச்சர் விஜயபாஸ்கர் அலட்சியமே மருத்துவர்களை போராடும் நிலைக்கு தள்ளியது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக வேதனை தெரிவித்திருக்கும் ஸ்டாலின் அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய மருத்துவப் பணியின் முக்கியத்துவத்தை கருதி அரசு மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று மு.கஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.







One thought on “மருத்துவர்கள் கோரிக்கையை பரிசீலனை செய்ய ஐஏஎஸ் அதிகாரி செந்தில் ராஜ் நியமனம்”