தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

 

சென்னை உட்பட பல இடங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக,கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply