வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்படும் இடத்தில் கரை உடைந்ததால் விவசாயத்திற்கு பயன் படும் நீர் வீணாகவதாக விவசாயிகள் புகார்

கோவையில் உள்ள காளம்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்படும் இடத்தில் கரை உடைந்ததால் விவசாயத்திற்கு பயன் படும் நீர் வீணாகவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

 

அதே போல கடந்த சில மாதங்களாக வறண்டு கிடந்த நொய்யல் ஆற்றிலும் தண்ணீர் வர துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் கோவையை அடுத்த காளம்பாளையத்தில் குனியமுத்தூர் வாய்க்காலின் குறுக்கே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாலம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தப் பாலத்தின் கட்டுமான பணிகள் சரிவர முடியாமல் பாதியிலேயே இருந்ததால் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாலம் கட்டப்பட்டு இருந்த இடத்தில் கரை உடைந்தது.

இதனால் பேரூர் சொட்டையாண்டி,சுங்க நாராயண சமுத்திரம், பெரியகுளம், செங்குளங்களுக்கு செல்ல வேண்டிய நீர் கரை உடைந்ததால் மீண்டும் நொய்யல் ஆற்றுக்கு சென்று விடுகிறது.இதனால் விவசாயத்திற்கு பயன்படும் வேண்டிய நீர் வீணாக ஆறில் கலந்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து இன்று அப்பகுதியில் ஆய்வு செய்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் இது போன்று தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் விடப்பட்டு பணிகள் நிறைவடையாத நிலையில் உள்ளதால் விவசாயிகளுக்கு பயன்பட வேண்டிய நீர் வீணாக ஆற்றில் கலப்பதாகவும், இதனால் இது போன்ற பணிகளை பொதுப்பணித்துறை மூலம் விரைவாக செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


Leave a Reply