உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 12 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், கவின் மற்றும் சாக்ஷியின் காதலில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், லாஸ்லியா பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரிடமும், சாக்ஷிக்கு நடந்த அந்த அநியாயத்திற்கு பொறுப்பு நான் தான். எனவே தயவு செய்து யாரும் என்னோட கதைக்காதீங்க. உங்களை கெஞ்சி கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு கலங்கிய கண்களுடன் செல்கிறார்.