--- --:--:-- --

தவறான பட்டனை அழுத்தியதால் விமானி 3 மாதம் சஸ்பண்ட்

30a5d3be-aec0-4012-acfc-2acccc12e1c1

கடந்த 8-ம் தேதி டெல்லியில் இருந்து காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு ஏர் ஏசியா விமானம் ஓன்று புறப்பட்டு சென்றது. அப்போது அந்த விமானம் சென்று கொண்டு இருந்த போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது . இந்நிலையில் உடனடியாக தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு விமானி தகவல் கொடுக்க முயற்சி செய்தார்.

 

என்ஜினில் கோளாறு என்றால் 7700 என்ற சமிஞ்சை கோடை அழுத்த வேண்டும். ஆனால் விமானி விமானம் கடத்தப்பட்டதாக கூறும் 75,000 கோடை தவறுதலாக அழித்து விட்டார்.இதனால் காஷ்மீருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் கடத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி ஆனார்கள்.அதன் பின்னர் கிடைத்த தகவல் படி விமானம் கடத்தப்படவில்லை என நிம்மதி அடைந்தனர்.

அந்த விமானத்தை இயக்கிய ரவி ராஜீவுக்கு விமானப் போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்குஅந்த விமானி தனது தவறு குறித்து விளக்கம் கொடுத்தார்.ஆனால் அதில் திருப்தி அடையாத விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அந்த விமானனியை மூன்று மாதம் இடைநீக்கம் செய்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon