தமிழகத்தில் செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் உள்ள காமராஜர் அரசு மகளிர் பள்ளியில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர்கள் செங்கோட்டையன், பெஞ்சமின்,பாண்டியராஜன் மற்றும் அம்பத்தூர் எம்எல்ஏ. அலக்ஸாண்டர் ஆகியோர் மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினர். அரசு பள்ளிகளில் நிகழும் கலை நிகழ்ச்சிகள், அரசு கல்வி தொலைகாட்சியில் பதிவேற்றம் செய்து யு-ட்யூப் இல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
மாவீரன் அழகுமுத்துக் கோனுக்கு விஜய் புகழாரம்..!
மனைவியை கட்டிப் போட்டு தாக்கிய கணவன்..!
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிரோடு எழுந்த அதிசயம்!
TTD-ல் 1,000 மாற்று மதத்தினர் வேலை: மத்திய அமைச்சர் புகார்
தனது தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட ராதிகா..!
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்