தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டனின் சொந்த மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இருளில் மூழ்கி அல்லல் படும் மக்கள் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் துண்டிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை மட்டுமல்லாமல் மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஏற்கனவே குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது இந்நிலையில் கூடுதலாக மின்சாரமும் தடைபட்டுள்ளதால் மேலும் மக்களுக்கு வேதனையை அனுபவித்து வருவதாக கூறுகின்றனர்.
இந்த மக்களின் முக்கிய அங்கமாக மின்சாரம் தேவைப்படுகிறது ஆனால் மின்சாரம் தொடர்ந்து துண்டிப்பு காரணமாக நகர் முழுவதும் தெரு விளக்குகள் இரவு நேரத்தில் எரியாததால் பல்வேறு விதமான குற்றச் செயல்களுக்கு மாவட்ட நிர்வாகமும் அமைச்சர் மணிகண்டனும் பொறுப்பேற்க வேண்டும், என்று இந்த மாவட்ட சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக எழுப்பி வருகின்றனர்.அமைச்சரின் வீட்டில் ஜெனரேட்டர் மூலம் செயல்பட்டு வருகிறது