முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவு அடைந்தது.
இதே போல் முன்னாள் பிரதமர் தேவகௌடா அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவியதால் அவரால் 17 வது மக்களவையில் இடம் பெற முடியவில்லை. நாடாளுமன்றத்தில் வாஜ்பாய், தேவகௌடா, மன்மோகன்சிங் என தொடர்ந்து முன்னாள் பிரதமர்கள் இருந்து வந்த நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு நாடாளுமன்றத்தில் தற்போது முன்னாள் பிரதமர்கள் இல்லாத நிலைஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
அணுசக்திக்கு மாறும் இந்தியா - மின் கட்டண விதிகளில் அதிரடி மாற்றம்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் செய்தியாளர் சந்திப்பு..!
தொண்டர் போராட்டம் - சமாதானப்படுத்திய எல்.முருகன்
என்.டி.ஏ கூட்டத்தில் 'மாம்பழம்' - ராமதாஸ் கண்டனம்
எதிர்மறை வாக்கு எல்லாம் எங்கள் கூட்டணிக்கு தான் வரும்: ஜி.கே.வாசன்
கறிக்கோழி வளர்ப்பு குறித்து சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!






