வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். கடந்த 2009 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.
அப்போது விடுதலை புலிகளுக்கு ஆதரவாக , வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது சீமான் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். கொள்ளையடிக்கப்படுபவர்களின் ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருக்கும் போது தன்னுடைய இனத்துக்காக பேசியது, தன்மீது வழக்கு பதிவு செய்யபட்டிருப்பதாக விமர்சித்தார்.
மேலும் செய்திகள் :
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா?
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!
தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!
மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!
தமிழ்நாட்டிற்கு வரும் மோடி இட்லி, தோசைதான் பிடிக்கும் என்பார் - கார்த்தி சிதம்பரம்






