கோவையில் பிரபலமான சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்திற்கு சீல்.மாநகராட்சி அதிரடி.

கோவையில் செயல்பட்டு வந்த சரவணா செல்வரத்தினம் வணிக வளாகம் உள்ளூர் திட்ட குழும விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்தியதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை ஒப்பணக்கார வீதியில் சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் செயல்பட்டு வருகின்றது. தரைத்தளம் மற்றும் 5 மாடிகளுடன் 2600 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இந்த வணிக வளாகத்தில் துணிக்கடை, பாத்திரகடை, வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகளுக்காக விளையாட்டு பொருட்கள் என தனித்தனியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தினமும் பல்லாயிரகணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த வணிக வளாகத்தில்
பார்க்கிங் பகுதிக்கான இடத்தை குடோனாக பயன்படுத்தி வருவதாகவும்,ஓவ்வொரு தளத்திலும் தனித்தனியாக திறந்த வெளி பகுதி விடாமல் இருப்பதாகவும், வளாகத்திற்கு முன்னால் இருக்கும் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்துவதாகவும் சமூக ஆர்வலர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் அனுமதி பெறப்பட்டதற்கு முரணாக இந்த வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளதாகவும், இது உள்ளூர் திட்ட குழும விதிகளுக்கு புறம்பானது எனக்கூறி வளாகத்திற்கு சீல் வைக்க கடந்த மார்ச் 12ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று நகர ஊரமைப்பு சட்டத்தின் விதிமுறைகளின்படி ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்துக்கு உள்ளூர் திட்டக்குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து சீல் இன்று காலை வைத்தனர். முன்னதாக வணிக வளாக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதன் காரணமாக மாநகராட்சி நிர்வாகிகள் காவல்துறையினர் உதவியுடன் வணிக வளாகத்திற்கு சீல் வைத்தனர்.

 

மிகவும் பிரபலமான சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்திற்கு சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply