கோயிலுக்கு சென்ற சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்…ஓட்டுநர்கள் வெறிச்செயல்..!

கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் கோவிலுக்கு சென்ற மற்றொரு சிறுமியை ஆட்டோவில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனியாக கோயிலுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது சிறுமி சென்ற கோவில் பூட்டியிருந்ததால் வேறு கோயிலுக்கு அழைத்து செல்வதாக ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இதை நம்பி சிறுமி ஆட்டோ ஓட்டுநருடன் சென்றுள்ளார். அதை அறிந்த அந்த சிறுமி, ‘எங்கு கூட்டி செல்கிறீர்கள் என கூச்சல் போட்டுள்ளார். கோவிலுக்கு மாற்றுப் பாதையில் செல்கிறேன்’ எனக் கூறி ஆட்டோ ஓட்டுநர் மிரட்டியுள்ளான்.


அந்த சிறுமியை ஆட்டோ ஓட்டுநர் ராஜாஜி மார்க்கெட் பின்புறம் உள்ள காலி இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். செல்லும் போதே தன் நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளான். இதனையடுத்து 4 பேர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ரயில்வே சாலையில் அந்த சிறுமியை இறக்கி விட்டு, அந்த கும்பல் தப்பியது. சிறுமியை தேடி அலைந்த உறவினர்கள், அவளை பார்த்து, வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் உண்டி ராஜா மற்றும் அவன் நண்பன் தேவா ஆகியோரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகிறார்கள். கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Reply