சிறையில் உயிரிழந்த முத்து மனோ குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி..!
பாளையங்கோட்டை சிறையில் உயிரிழந்த முத்து மனோ என்பவரது குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவியை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
முத்து மனோவின் இறப்பிற்கு காரணமான பாளையங்கோட்டை சிறை பணியாளர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். சிபிசிஐடி விசாரித்துவரும் நிலையில் விசாரணையின் முடிவில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.







