25 ஆயிரம் ரூபாயை இழந்ததால் இளைஞர் தற்கொலை..!
ராணிப்பேட்டை மாவட்டம் காவிரிப்பாக்கத்தை சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் ஆன்லைன் செயலியில் கடன் பெறுவதாக கூறி வாட்ஸப்பில் வந்த போலி காசோலையை நம்பி 25 ஆயிரம் ரூபாயை இழந்ததால் மனம் உடைந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்காக தனது தாய்க்கு அனுப்பிய குரல் பதிவில் இது தெரிய வந்துள்ளது.





