ஓட்டுக்காகவே மகளிர் உரிமைத் தொகை : இபிஎஸ் பாய்ச்சல்
ஓட்டுக்காகவே மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விதிகளை ஸ்டாலின் தளர்த்தி இருப்பதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெரம்பலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், தேர்தல் வருவதால் மேலும் 30 லட்சம் பேரை இந்த திட்டத்தில் இணைத்து வாக்குகளை பெற முயற்சிப்பதாகவும் சாடினார். மகளிர் உரிமைத் தொகைக்கு வழங்கும் பணம் ஸ்டாலினின் சொந்தப் பணம் இல்லை எனவும் இபிஎஸ் காட்டமாக கூறினார்.





