காதல் கணவன் கொல்லப்பட்டதால் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை..!
தர்மபுரி அருகே காதல் கணவன் கொல்லப்பட்ட ஒரே மாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணே தற்கொலை செய்து கொண்டவர். இவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி விஜய் என்பவரை அண்மையில் காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதனை விரும்பாத பெண்ணின் தந்தை முனிராஜ் கடந்த மாதம் 1ஆம் தேதி விஜயை வரவழைத்துக் கொலை செய்த கணவனை இழந்ததால் தாய் வீட்டில் வசித்து வந்த ராஜேஸ்வரி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது உடல் தர்மபுரி அரசு மருத்துவமனையில் கூராய்வு செய்யப்படுகிறது. விஜய் கொலை தொடர்பாக முனிராஜ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.







