பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பேராசிரியர் சுருண்டு விழுந்து பலி..!
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் ஐஐடியின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் நெஞ்சு வலியால் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் தலைவரும் மாணவர்கள் விவகாரங்கள் துறை டீனுமான 53 வயது பேராசிரியர் அமீர்கான் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய பொழுது மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.





