மருத்துவமனையில் செவிலியர்கள் போல் ஊசி போடும் வாட்ச்மேன்..!
விழுப்புரம் மாவட்ட வீரபாண்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை என கூறப்படுகிறது.
இதனால் இரவு நேர காவலாளியான தேவி என்பவர் நோயாளிகளுக்கு ஊசி போடுவதாக புகார் வந்துள்ளது. மருத்துவர் எங்கே என நோயாளிகள் கேள்வி கேட்டால், இந்த மருத்துவமனைக்கு எல்லாம் தாம் தான் என்றும், சில சமயங்களில் பிரசவம் கூட பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.





