ஏழைகளின் குரல் திமுக: கனிமொழி
விளிம்புநிலை மக்களின் வலிமையான குரல் திமுக என கனிமொழி MP தெரிவித்துள்ளார். DMK 75வது ஆண்டு பவள விழாவையொட்டி Xஇல் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தின் சமூக அரசியல் சூழலை திமுக மாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விதி மற்றும் பிறப்பின் நம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு, சமூக நீதி, மொழிவாரி உரிமை, மாநில சுயாட்சிக்காக போராட அதிகாரம் அளித்தது DMK தான் எனவும் அவர் கூறியுள்ளார்.





