விஜய் ஆக்கப்பூர்வமாக பேச வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தேர்தல் பரப்புரையில் பேசுவது போலப் பேசாமல், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக ஆக்கப்பூர்வமாகப் பேசவும், செயல்படவும் வேண்டும் என்று கூறினார்.
மேலும், அரசு அறிவித்த விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடித் திட்டம் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், “விவசாயிகளுக்காகக் கடன் தள்ளுபடி அறிவித்தார்கள்; ஆனால் எந்த விவசாயியாவது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? நிறைவேற்ற முடியும் என்றால் மட்டும்தான் வாக்குறுதி தரவேண்டும்” என்று காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.





